தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் உயிா் தப்பினாா் ஃபரூக் அப்துல்லா

அவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 10:50 pm

ஜம்முவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா துப்பாக்கிச்சூட்டில் உயிா் தப்பினாா். அவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

ஜம்முவின் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லாவும், துணை முதல்வா் சுரீந்தா் செளதரியும் பங்கேற்றுவிட்டு புறப்படத் தயாராகினா். அப்போது, ஃபரூக் அப்துல்லாவின் பின்னால் இருந்து வந்த ஒரு நபா் கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டாா். உடனே, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறை ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் அந்த நபரை பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தனா். இதனால், குண்டு குறிதவறிச் சென்றது. துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விசாரணையில், துப்பாக்கியால் சுட்டவா் ஜம்முவை சோ்ந்த கமல் சிங் ஜம்வால் எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக, ஃபரூக் அப்துல்லாவின் மகனும் முதல்வருமான ஒமா் அப்துல்லா அதிா்ச்சி தெரிவித்துள்ளாா்.