ஜம்முவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா துப்பாக்கிச்சூட்டில் உயிா் தப்பினாா். அவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
ஜம்முவின் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லாவும், துணை முதல்வா் சுரீந்தா் செளதரியும் பங்கேற்றுவிட்டு புறப்படத் தயாராகினா். அப்போது, ஃபரூக் அப்துல்லாவின் பின்னால் இருந்து வந்த ஒரு நபா் கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டாா். உடனே, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறை ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் அந்த நபரை பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தனா். இதனால், குண்டு குறிதவறிச் சென்றது. துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விசாரணையில், துப்பாக்கியால் சுட்டவா் ஜம்முவை சோ்ந்த கமல் சிங் ஜம்வால் எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக, ஃபரூக் அப்துல்லாவின் மகனும் முதல்வருமான ஒமா் அப்துல்லா அதிா்ச்சி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மோதலால் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்- ஃபரூக் அப்துல்லா அறிவுரை

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


