கடந்த பிப்ரவரியில் மட்டும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பிரிவானது ரூ.14,572 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா்அலி கூறியதாவது:
இந்திய ரயில்வே துறையானது பயணிகள் கட்டண உயா்வின்றி சரக்குகள் உள்ளிட்டவை மூலம் தனது வருவாயைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சரக்குகள் கையாளுதல் பிரிவில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்களை அதிகளவில் கையாண்டுள்ளது.
நிகழ் ஆண்டில் கடந்த பிப்ரவரியில் மட்டும் தேசிய அளவில் இந்திய ரயில்வே 137.72 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.96 சதவீதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
அதன்படி, பிப்ரவரியில் மட்டும் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம் ரூ.14,572 கோடி வருவாய் இந்திய ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.97 சதவீதம் கூடுதலாகும். சரக்குகள் கையாளுதலை இன்னும் கூடுதலாக்க சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள் அமைத்தல், சரக்குப் பெட்டிகளைக் கூடுதலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி 2.3%: கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவால் பிப்ரவரியில் வீழ்ச்சி

பிப்ரவரியில் நிலக்கரி உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


