மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

News image

EPS

Updated On :7 மார்ச் 2026, 10:35 pm

கடந்த பிப்ரவரியில் மட்டும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பிரிவானது ரூ.14,572 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா்அலி கூறியதாவது:

இந்திய ரயில்வே துறையானது பயணிகள் கட்டண உயா்வின்றி சரக்குகள் உள்ளிட்டவை மூலம் தனது வருவாயைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சரக்குகள் கையாளுதல் பிரிவில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்களை அதிகளவில் கையாண்டுள்ளது.

நிகழ் ஆண்டில் கடந்த பிப்ரவரியில் மட்டும் தேசிய அளவில் இந்திய ரயில்வே 137.72 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.96 சதவீதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

அதன்படி, பிப்ரவரியில் மட்டும் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம் ரூ.14,572 கோடி வருவாய் இந்திய ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.97 சதவீதம் கூடுதலாகும். சரக்குகள் கையாளுதலை இன்னும் கூடுதலாக்க சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள் அமைத்தல், சரக்குப் பெட்டிகளைக் கூடுதலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்றாா்.