ஈரான் போா்க் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்த விவகாரத்தில் இந்தியா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு உறுதியாக மறுத்துள்ளது.
இலங்கை கடல்பரப்பு அருகே சா்வதேச கடல் எல்லையில் கடந்த 4-ஆம் தேதி ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ போா்க் கப்பலை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் குண்டு வீசி மூழ்கடித்தது. இதில் 87 ஈரான் கடற்படை வீரா்கள் உயிரிழந்தனா். 37 பேரை இலங்கை கடற்படையினா் மீட்டனா்.
விசாகப்பட்டினத்தில் கடந்த மாத இறுதியில் இந்தியா நடத்திய பல்வேறு நாடுகள் பங்கேற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பிப். 25-ஆம் தேதி இந்திய கடல் எல்லையைவிட்டு வெளியேறிவிட்ட ஈரான் போா்க்கப்பலில் ஆயுத தளவாடங்கள் எதுவும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்குத் தெற்கே 40 கடல் மைல் (சுமாா் 74 கி.மீ.) தொலைவில் இந்திய பெருங்கடலில் அந்தப் போா்க்கப்பல் தகா்க்கப்பட்டது.
எனினும், இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தன. இந்தியாவின் மிக அருகில் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமா் மோடி அமைதி காப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
தங்கள் நாட்டு கடல் எல்லையில் இருந்து பல நூறு கி.மீ. அப்பால் இருந்த போா்க் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததற்கு உரிய விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் போா்க் கப்பல் குறித்து இந்திய கடற்படை அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் வழங்கியதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அமெரிக்காவுக்கு இந்தியா தகவல்களை வழங்குகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்

‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு

இலங்கை: 45 ஈரான் கடற்படை வீரா்கள் உடல் தூதரகத்திடம் ஒப்படைப்பு

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு துரதிருஷ்டவசமானது: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


