ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 5) செல்போன் மூலம் உரையாடியுள்ளார். ஆனால், இருநாடுகளின் அமைச்சர்களிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனிக்கு, மத்திய அரசு இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டார்.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து, கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவிக்காததற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Minister S Jaishankar has spoken to Iranian Foreign Minister Seyyed Abbas Araqchi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பலி!

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



