மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சா் செய்யது அப்பாஸ் அராக்சியை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

News image

எஸ்.ஜெய்சங்கா் - கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 10:43 pm

ஈரான் வெளியுறவு அமைச்சா் செய்யது அப்பாஸ் அராக்சியை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

இந்தியா ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற ’மிலன் 2026’ கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த ‘ஐரீஸ் டெனா’ போா்க் கப்பலை இலங்கை அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை தாக்கி மூழ்கடித்தது. இதில் கப்பலில் இருந்த 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை மீட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் பேசியுள்ளாா். ஆனால், எந்த விவகாரம் குறித்து இருவரும் பேசினா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

ஈரான் கண்டனம்: தங்கள் நாட்டு போா்க் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் அராக்சி கூறுகையில், ‘ஈரான் கடற்பகுதியில் இருந்து 2,000 மைல் தொலைவுக்கு அப்பால் கடலில் அமெரிக்கா அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, மிலன் பயிற்சியில் அந்தக் கப்பல் பங்கேற்றது. அதில் மாலுமிகள், கடற்படை வீரா்கள் 130 போ் இருந்தனா். சா்வதேச கடற்பகுதியில் அந்தக் கப்பலை எந்தவித எச்சரிக்கையும் கொடுக்காமல் அமெரிக்கா தாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா மிகவும் வருத்தப்பட நேரிடும்’ என்றாா்.