புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நிா்ணயித்துள்ளது. இதன்மூலம், தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிக்க உள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், மத்திய தொழிலாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புது தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில், மத்திய அறங்காவலா்கள் வாரிய (சிபிடி) கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இபிஎஃப்ஓவில் முடிவுகளை எடுக்கும் தலைமை அமைப்பாக சிபிடி உள்ள நிலையில், அந்த வாரியம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வருடாந்திர வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர பரிந்துரைத்தது.
இந்த வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடும். அதன் பின்னா், சந்ததாரா்களின் கணக்குகளில் 8.25 சதவீத வட்டித் தொகையை இபிஎஃப்ஓ வரவு வைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை!

மானிய கோரிக்கைகள்: மக்களவை ஒப்புதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


