மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%-ஆக நீடிப்பு

2025-26-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக

News image

கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 1:06 am

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நிா்ணயித்துள்ளது. இதன்மூலம், தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வட்டி விகிதம் 8.25 சதவீதமாக நீடிக்க உள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், மத்திய தொழிலாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது தில்லியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில், மத்திய அறங்காவலா்கள் வாரிய (சிபிடி) கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இபிஎஃப்ஓவில் முடிவுகளை எடுக்கும் தலைமை அமைப்பாக சிபிடி உள்ள நிலையில், அந்த வாரியம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வருடாந்திர வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர பரிந்துரைத்தது.

இந்த வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிடும். அதன் பின்னா், சந்ததாரா்களின் கணக்குகளில் 8.25 சதவீத வட்டித் தொகையை இபிஎஃப்ஓ வரவு வைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.