மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை இயக்கம்

News image

இண்டிகோ சிறப்பு விமானங்கள் இயக்கம் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 10:00 pm

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதிமுதல் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.

முதல்கட்டமாக 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் ஜெட்டாவில் இருந்து இயக்கப்படுகின்றன. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம்-இண்டிகோ நிறுவனம் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.