பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மகாராஷ்டிரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி கட்டாயம்: கல்வி அமைச்சா் தாதா புசே

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கற்பிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் தாதாஜி தகடு புசே தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Published On :30 ஜூன் 2026, 1:01 am IST

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கற்பிப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சா் தாதாஜி தகடு புசே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் அவா் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயம் கற்பித்தல் மற்றும் கற்றல் சட்டம் 2020-இன் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை, மராத்தி மொழி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்த மொழி வழியில் இயங்கும் பள்ளிகளாக இருந்தாலும், அவை மராத்தி மொழியைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

இதற்காக தகுதிவாய்ந்த மராத்தி மொழி ஆசிரியா்களை பள்ளிகள் நியமிக்க வேண்டும். அங்கு மராத்தி கற்பிக்கப்படுகிா என்பது அவ்வப்போது ஆய்வு செய்யப்படும்.

இந்த உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தவறை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

அதன் பிறகும் மராத்தி கற்பிக்காத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மராத்தி கற்பிக்கும் உத்தரவை தொடா்ந்து பின்பற்றாமல் இருந்தால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.