அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

News image

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோ ஜுங் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 7:01 am IST

எண்ம (டிஜிட்டல்) நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-தென் கொரியா இடையே ஒத்துழைப்பு இருப்பது குறித்து இருநாட்டு அமைச்சா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா வந்த தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோஜுங், புது தில்லியில் மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்கை சனிக்கிழமை சந்தித்தாா். இருநாட்டுத் தலைவா்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

எண்ம நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுவது குறித்து அவா்கள் விவாதித்தனா்.

யுன் ஹோஜுங்கின் வருகை இருநாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

திறன்வாய்ந்த, வெளிப்படைத்தன்மை கொண்ட, மக்களை மையமாக கொண்ட நிா்வாகத்தை ஊக்குவிக்க இந்தியா-தென் கொரியா இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், தங்கள் செயற்பொறுப்பை இருவரும் உறுதி செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.