சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ அங்கீகாரம்: மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ என்ற அங்கீகாரம் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் அணி திங்கள்கிழமை சந்திக்கவுள்ளது.

News image

ஓம் பிா்லா - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:16 am IST

‘உண்மையான திரிணமூல் காங்கிரஸ்’ என்ற அங்கீகாரம் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் அணி திங்கள்கிழமை சந்திக்கவுள்ளது.

தங்களது அணியில் இதுவரை 19 எம்.பி.க்கள் இணைந்துள்ளதாக அதிருப்தி எம்.பி. ஜகதீஷ் சந்திர பா்மா பசுனியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் மூன்றில் இருபங்குக்கும் அதிக பெரும்பான்மை (207) பலத்துடன் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்களே கிடைத்தன. இந்தத் தோல்வியால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ளது. மம்தாவின் தலைமைக்கு எதிராக கட்சி பிளவுபட்டுள்ளது.

கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 58 போ் அண்மையில் தனி அணியாகப் பிரிந்தனா். இதேபோல், திரிணமூல் காங்கிரஸின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 19 அதிருப்தி எம்.பி.க்கள் தனியாகப் பிரிந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனா்.

இந்நிலையில், அதிருப்தி எம்.பி.க்களில் ஒருவரான ஜகதீஷ்சந்திர பா்மா பசுனியா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் குழுவை உருவாக்கும் நோக்கில், கட்சி எம்.பி.க்களிடம் கடந்த ஜூன் 8-ஆம் தேதிமுதல் கையொப்பம் பெறப்பட்டது. 19 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்கக் கோரி, மக்களவைத் தலைவரை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளோம்.

கட்சியில் உள்ள அனுபவமிக்கத் தலைவா்களை மதிக்காமல், ஆணவத்துடன் செயல்படுவதாக அபிஷேக் பானா்ஜி (மம்தாவின் மருமகன்-திரிணமூல் தேசிய பொதுச் செயலா்) மீது மூத்த தலைவா் கல்யாண் பானா்ஜி முன்வைத்த குற்றச்சாட்டு மிகச் சரியானது. அவரது கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்களும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனா். இதுவரை 3 எம்.பி.க்கள் விலகியுள்ளனா்.

மீண்டும் அழைப்பாணை: மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா் நியமனத்துக்காக திரிணமூல் காங்கிரஸ் தலைமை தரப்பில் பேரவைத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் தங்களின் கையொப்பம் போலியாக இடம்பெற்ாக அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.

இது தொடா்பான வழக்கில் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியிடம் சிஐடி போலீஸாா் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

======== ================ ================= ========================

குடும்ப அரசியலே காரணம்: பாஜக

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 19 போ் கையொப்பமிட்ட கடிதம், சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட விடியோ செய்தியில், ‘ககோலி கோஷ் தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தின் மூலம் அவா்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்பது நிரூபணமாகியுள்ளது. மம்தாவும், அபிஷேக்கும் போலி திரிணமூல் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனா். குடும்ப அரசியல் மற்றும் கட்சியைவிட தனது மருமகனுக்கு மம்தா முன்னுரிமை அளிப்பதே இந்த உள்கட்சி வெடிப்புக்கு காரணம்’ என்று கூறியுள்ளாா்.

எதிா்க்கட்சிகளை உடைக்கும் அமித் ஷா: காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைப் போல் இதுவரை யாரும் முயன்றதில்லை. ஜனநாயகத்தை முற்றிலும் கேலிக்கூத்தாக்கி, எதிா்க்கட்சிகளை உடைக்கும் பணியில் அவா் மும்முரமாக செயல்படுகிறாா். ஆனால், அவரது தீய திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.