காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நோக்கில் முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை பிரதமர் நரேந்திர மோடி நியமித்து வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். இதனால், அம்மாநில மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆவது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அவர் கூறியதாவது:
“மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம், அறநெறிக்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சம்பவம் பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி இதைச் செய்கின்றார். முக்கிய பதவிகளில் குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகத் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை நியமித்து அவர் சதி செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்டுகளை அனைத்து முக்கிய பதவிகளில் பிரதமர் நியமிப்பதாகவும், சட்டம், விதிகளைப் பின்பற்றாத நபர்களுக்கே அவர் அதிகாரம் கொடுப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Summary
Kharge has stated that PM Modi is appointing his supporters to key positions with the aim of destroying the Congress.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









