கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடி! அமலாக்கத்துறை விசாரணை

சைபர் மோசடி குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 5,300 இந்திய சிம் கார்டுகள்...

News image

IANS

Updated On :8 ஜூன் 2026, 9:10 pm IST

புது தில்லி : 5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடைபெற்ற சைபர் குற்ற வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வாங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்படும் மலேசியாவைச் சேர்ந்தவொரு மோசடி கும்பலால் இந்தியாவில் பல்வேறு இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாம். இந்தியாவிலுள்ள சில முகவர்கள் இந்திய சிம் கார்டுகளை கம்போடியாவில் இயங்கும் கும்பலுக்கு மலேசிய நாட்டவர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பல் இந்தியாவில் பல தரப்பு மக்களிடம் நூறுகளில் செலுத்தும் ரூபாய்க்கு கோடிகளில் பணம் திருப்பி வழங்குவதாக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, ராஜஸ்தானில் 7 இடங்களிலும் பஞ்சாபிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், உள்ளூர் வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் தொடங்கி சைபர் மோசடிக்கு அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

சைபர் மோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஆய்வுக்குட்படுத்திய 2.3 லட்சம் சிம் கார்டுகளில் ஏறத்தாழ 36,000 சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்பட்டதும் அவற்றில் 5,300 சிம் கார்டுகள் இந்தியாவெங்கிலும் இணையவழி மோசடிகளுக்காக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

Summary

The Enforcement Directorate has started probing a case involving the alleged purchase of 5,300 SIM cards in the country, which were used in Cambodia by a Malaysian national-led gang to perpetrate cyber frauds across India, duping people for hundreds of crores of rupees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.