திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜக

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள் இருப்பதாக பாஜக தலைவர் பேசியது பற்றி...

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள். - படம் - எக்ஸ்

Updated On :4 ஜூன் 2026, 4:40 pm IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள் இருப்பதாக தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர். தொடங்கிய சில நாளிலேயே அந்த சமூக வலைதளப் பக்கங்களை கோடிக்கணக்கில் மக்கள் பின்தொடர்ந்தனர்.

இவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக குரல்களை எழுப்புவது, கட்சிக்கென செய்தித் தொடர்பாளர்களை நியமிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் பேசியதாவது:

பிரச்னைகளுக்கு எதிராக போராட இளைஞர்களுக்கு உரிமை உண்டு. இங்கு பல மாணவர் அமைப்புகள் உள்ளன. அனைத்து மாணவர்களும் பாஜக-வையோ அல்லது ஏபிவிபி-யையோ பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல.

ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகளுடன் தொடர்புடையவர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் சில குறிப்பிட்ட கருத்துகளைப் பரப்ப முயற்சிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உண்மையான அடித்தளம் எதுவும் இல்லை.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள் மற்றும் ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வரும் ஜூன் 6 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே தலைமையில் நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அமைதி வழியில் போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Telangana BJP State President Ramachander Rao alleged on Thursday that Naxalites are behind the cockroach janata party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.