திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி!

ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

News image

எபொலா வைரஸ் - AP

Updated On :4 ஜூன் 2026, 5:13 pm IST

ஹைதராபாத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்தவருக்கு எபோலா அறிகுறி தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எபோலா பாதித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சூடான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு சூடானில் வந்தார். அவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வேகமாகப் பரவி வரும் நிலையில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கான பரிசோதனை மையத்தை விமான நிலைய சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ”சூடானைச் சேர்ந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்குப் பயணம் சென்று வந்துள்ளார். ஆனால், அவருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகவில்லை. அவரைப் பரிசோதனை செய்துள்ளோம். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருக்கு எபோலா இருப்பதாகக் கூற முடியாது.

ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அந்த நபருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

எபோலா வைரஸ் நோய்த் தொற்று சிலநாடுகளில் பரவி வருவதையொட்டி, விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, மேம்படுத்தப்பட்ட பொது சுகாதாரத் தயார்நிலை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாக ஹைதராபாத் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.

உகாண்டா, காங்கோ மற்றும் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும்.

எபோலா வைரஸ் மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளையும் தாக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொற்று என உலக சுகாதார அமைப்பு அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பழம் தின்னும் வௌவால்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற பாதிப்புக்குள்ளான காட்டு விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.

Summary

Ebola Symptoms in Sudanese National in Hyderabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.