ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய தனியார் விமானம் ரத்து செய்யப்பட்டது பற்றி...

Bhubaneswar-bound flight couldn''t take off from Ranchi due to technical glitch: Official

பிரதிப் படம்

Published On :26 ஜூலை 2026, 3:58 pm IST

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய தனியார் விமானம் புறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிர்சா முண்டா விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, 58 பயணிகளுடன் தனியார் நிறுவன விமானம் சனிக்கிழமை மாலை சுமார் 6.20 மணியளவில் இங்கு வந்து சேர்ந்தது.

தரையிறங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானம் ஒடிசா தலைநகருக்குத் திரும்ப முடியவில்லை.

அதேவேளையில் ராஞ்சியைச் சேர்ந்த பயணிகள் அனைவரும் கொல்கத்தாவில் இருந்து வந்த மற்றொரு விமானம் மூலம் புவனேஸ்வர்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அது கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Summary

A Bhubaneswar-bound flight could not take off from here after a technical glitch was detected in the aircraft during a check, Birsa Munda Airport Director Vinod Kumar said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.