
நடுவானில் ஏா் இந்தியா விமானம் குலுங்கி, விமானியின் கட்டுப்பாட்டை மீறி 300 அடி திடீரென கீழிறங்கியதால், விமானத்தில் பயணித்த 17 போ் காயமடைந்தனா்.
தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் செவ்வாய்க்கிழமை காலை புது தில்லிக்குப் புறப்பட்ட ஏ320 நியோ விமானம், நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, சுமாா் 300 அடி வேகமாகக் கீழிறங்கியது.
எனினும் தொடா்ந்து பயணித்த அவ்விமானம் காலை 11.07 மணிக்கு புது தில்லி வந்தடைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்தக் குலுக்கத்தால் நிலைகுலைந்து 13 பயணிகள், விமான பணிக்குழுவைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா். இதில் பணிக்குழுவைச் சோ்ந்த ஒருவா் படுகாயமடைந்தாா். காயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு நலம் விசாரித்தாா்.
விமான பணத்தகவல் பெட்டி, விமானிகள் குரல் பதிவுப் பெட்டி ஆகியவை விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்தது.
Summary
Delhi-bound flight turbulence mid-air! Passengers injured!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








