ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள்! - சிஜேபிக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு!

தில்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் மம்மூட்டி பதிவு...

நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்துக்கு மம்மூட்டி ஆதரவு... - PTI | கோப்புப் படம்

Published On :23 ஜூலை 2026, 9:25 pm IST

தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகர் மம்மூட்டி பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற சிஜேபி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சிஜேபி இளைஞர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக நாட்டின் ஏராளமான நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள் எனக் கூறி சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மலையாள நடிகர் மம்மூட்டி இன்று (ஜூலை 23) பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Actor Mammootty has posted in support of the protest being held in Delhi by the cjp against the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.