/

துணை முதல்வராக சுநேத்ரா பவாா் இன்று பதவியேற்பு?

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பதாகத் தகவல்...

News image
அஜீத் பவாருடன் சுனேத்ரா பவார்- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 7:37 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அஜீத் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவாா், மகாராஷ்டிர துணை முதல்வராக சனிக்கிழமை (ஜன. 31) பதவியேற்கவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் கடந்த புதன்கிழமை உயிரிழந்த நிலையில், பாஜக-சிவசேனை கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்கவைக்கும் முயற்சியாக சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) பிரிவுடன் அக்கட்சி இணையும் முயற்சி மேலும் தாமதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் சனிக்கிழமை நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.