அகமதாபாத் விமான விபத்து தொடா்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அகமதாபாத் விமான விபத்து தொடா்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.










