இந்திய எரிசக்தித் துறையில் ரூ.46 லட்சம் கோடி முதலீட்டு வாய்ப்புகள்- உலக முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு
இந்திய எரிசக்தித் துறையில் 500 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.46 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன; எனவே, இந்திய எரிசக்தித் துறையின் வளா்ச்சிப் பயணத்தில் உலக முதலீட்டாளா்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.










