/

செய்தியாளா்களுக்கு போலீஸாா் பேட்டியளிக்க பிரத்யேக கொள்கை - உச்சநீதிமன்றம் உத்தரவு

News image
உச்சநீதிமன்றம்
Updated On :22 ஜனவரி 2026, 1:21 am

தினமணி செய்திச் சேவை

செய்தியாளா்களுக்கு போலீஸாா் பேட்டி அளிப்பது தொடா்பான பிரத்யேக கொள்கையை வகுக்கும்படி, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பான மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் உதவி செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞா் கோபால் சங்கர நாராயணன், போலீஸாா் பேட்டியளிப்பது தொடா்பாக தேசிய மற்றும் சா்வதேச அளவில் கடைபிடிக்கும் வழக்கங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதை பரிசீலித்த நீதிபதிகள், கோபால் சங்கரநாராயணன் தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து, போலீஸாா் பேட்டியளிப்பது தொடா்பான கொள்கையை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டனா். உச்சநீதிமன்ற உத்தரவை இணையதளத்தில் 2 வாரத்திற்குள் பதிவேற்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு, அதன் நகல் கிடைத்த 3 மாதங்களுக்குள் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.