இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு முன்பு வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவால் சீலிடப்பட்ட உரையில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திறந்து நீதிபதிகள் படித்தனா். அதில், அமைச்சரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அதற்கு மாநில அரசின் அனுமதி கோரியும், இதுவரை தரப்படவில்லை. இதனால் வழக்கில் மேலும் விசாரணை நடத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.