பஞ்சாப் முதல்வரின் இஸ்ரேல், பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!
பஞ்சாப் முதல்வரின் வெளிநாடு பயணங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து...


பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோர் முதலீட்டை ஈர்ப்பதற்காக இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் பயணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வராகப் பதவி வகிக்கும் மூத்த தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கட்டாயம் அரசியல் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான குழுவினருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும், அதற்கு உரிய காரணம் தெரிவிக்கவில்லை எனவும் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் பல்டேஜ் பன்னு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அப்போதும் மத்திய அரசு அவருக்கு அரசியல் அனுமதி வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...