பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து அவதூறு: தனி விசாரணை கோரிய அரவிந்த் கேஜரிவால் மனு தள்ளுபடி
பிரதமா் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தனி விசாரணை கோரி தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரின் மனுக்களை குஜராத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.










