இந்த வழக்கு, அதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றப் பத்திரிகைகளை ரத்து செய்யக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது லாலு தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசுப் பணியாளா் ஒருவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள, அந்தச் சட்டத்தின் 17ஏ பிரிவின்படி அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம். ஆனால் லாலுவுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள அந்த முன் அனுமதியை சிபிஐ பெறவில்லை. எனவே அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, அதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை, தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் சட்டப்படி செல்லுபடியாகாது’ என்று வாதிட்டாா்.