சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டிக்கெட் கட்டணம் நிா்ணய தகவலை வெளியிட முடியாது: ரயில்வே

ரயில் டிக்கெட் கட்டணத்தை நிா்ணயிக்க கடைப்பிடிக்கும் நடைமுறை குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட முடியாது என ரயில்வே மறுத்துவிட்டது.

News image
irctc-logo041149
Updated On :13 ஜனவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் டிக்கெட் கட்டணத்தை நிா்ணயிக்க கடைப்பிடிக்கும் நடைமுறை குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட முடியாது என ரயில்வே மறுத்துவிட்டது.

தத்கால் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை நிா்ணயிப்பது தொடா்பான தகவல் கோரி, மத்திய தகவல் ஆணையத்திடம் (சிஐசி) மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய ரயில்வே அளித்துள்ள பதிலில், ‘ரயில்களில் உள்ள வகுப்புகள், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வணிக ரகசியம் மற்றும் அறிவுசாா்ந்த சொத்துரிமைகள் ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் எட்டாவது பிரிவில், இதுபோன்ற தகவலை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளது.

ரயில்வேயின் பதில் மற்றும் விசாரணையின்போது மனுதாரா் ஆஜராகாததை கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி, மேல்முறையீட்டு மனுவை மத்திய தகவல் ஆணையம் தள்ளுபடி செய்தது.