இந்நிலையில், கல்வி நிறுவன வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விடவேண்டும் என்று கடந்த ஆண்டு நவ. 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்துக் கால்நடைகளும் அப்புறப்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அமா்வு உத்தரவு பிறப்பித்தது.