‘வாக்காளா் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்
‘வாக்காளா் பட்டியலில் இந்தியக் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவா் யாரும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்வது அரசமைப்புச் சட்ட கடமையாகும். எனவே, வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்கு தங்களுக்கு முழுமையான அதிகாரமும் தகுதியும் உண்டு’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வாதிட்டது.










