எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒடிசா கல் குவாரியில் வெடிவிபத்தில் இருவர் பலி! மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு!

ஒடிசாவில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாறைகள் சரிந்ததில் தொழிலாளர்கள் பலரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு

News image
விபத்து ஏற்பட்ட கல் குவாரி
Updated On :4 ஜனவரி 2026, 6:27 am

தினமணி செய்திச் சேவை

ஒடிசாவில் சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாகினர்; மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கல் குவாரியில், சனிக்கிழமை இரவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து, விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Story image

விபத்து ஏற்பட்ட குவாரியில் குப்பைகள் சிதறிக் கிடந்ததாகவும், பெரிய பாறைகள் சரிந்து விழுந்தும் இருந்தன. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இருவர் பலி என்று கூறப்படுகிறது.

இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதால், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் அபாயமும் உள்ளதாகக் காவல் அதிகாரிகள் கூறினர். மேலும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெளிவாக இல்லை என்று கூறினர்.

பெரியளவிலான கற்கள் விழுந்திருப்பதால், அவற்றை அகற்றுவதும் கடினம் என்பதால், கனரக வாகனங்களும் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.