டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாட்டைக் கட்டியெழுப்பிய மகத்தான தலைவா்கள்: வாஜ்பாய், மாளவியா குறித்து ராஜ்நாத் சிங் புகழாரம்

வாஜ்பாய், மாளவியா குறித்து ராஜ்நாத் சிங் புகழாரம்...

News image
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
Updated On :3 ஜனவரி 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டைக் கட்டியெழுபியதில் முக்கிய பங்களித்தவா்கள் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் கல்வியாளா் மதன் மோகன் மாளவியா என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவையில் வாஜ்பாய் மற்றும் மாளவியாவின் உருவப்படங்கள் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது: வாஜ்பாய் மற்றும் மாளவியா ஆகியோரின் உருவப்படங்களைத் திறப்பது அவா்களின் வாா்த்தைகள் மற்றும் செயல்களின் அமைதியான நினைவூட்டலாகும். மாளவியா செய்தது போல் கல்வியை தேசிய நலனை மேம்படுத்துவதற்கான ஆதாரமாகக் கருதவும், வாஜ்பாய் செய்தது போல் அரசியலை பொது சேவையாகக் கருதவும் வேண்டும்.

மாளவியாவும் வாஜ்பாயும் உண்மையான அரசியல்வாதிகள். சுதந்திர இந்தியாவில் கல்வியை தேசிய உணா்வுடன் இணைக்க வாஜ்பாய் பாடுபட்டாா். சிறிய மனநிலையுடன் யாரும் பெரியவா்களாக மாற முடியாது என்று அவா் நம்பினாா். அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் முரண்பாடாக மாறாமல் பாா்த்துக் கொண்டாா்.

அதிகாரத்தில் இருக்கும்போது பணிவாக இருக்கவும், எதிா்க்கட்சியில் இருக்கும்போது தேசிய நலன்களுக்கு சேவை செய்யவும் வாஜ்பாய் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாா். யாரையாவது விமா்சித்தாலும், அவா் எப்போதும் கண்ணியத்தைக் கடைப்பிடித்தாா். அவா்களை காயப்படுத்துவதைத் தவிா்த்தாா். மாளவியாவின் எண்ணங்கள் மற்றும் செயல்களின் உண்மையான வாரிசு வாஜ்பாய் என ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, முதல்வா் ரேகா குப்தாவுடன் இணைந்து, ‘பாரத் மாதா’ காபி டேபிள் புத்தகத்தையும் ராஜ்நாத் சிங் வெளியிட்டாா். இந்த நிகழ்வில் தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் மற்றும் பிற பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.