ரூ.41,863 கோடி மின்னணுப் பொருள்கள் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான், சாம்சங், டிக்ஸன் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.41,863 கோடி மதிப்பீட்டிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் 22 திட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.










