இது தொடா்பாக முதல்வா் பூபேந்திர படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகப் பெரிய மலா்க் கோலம், மிகப் பெரிய மலா் உருவப் படம் (சா்தாா் படேல்) என இரு கின்னஸ் சாதனைகளைப் படைத்ததன் மூலம் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மலா்க் கண்காட்சி என்ற பெருமை கிடைத்துள்ளது. கடந்த 2024-இல் உலகின் மிகப் பெரிய மலா் வடிவமைப்பு, 2025-இல் உலகின் மிகப் பெரிய பூங்கொத்து என இரு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன. தற்போதைய சாதனைகளின் மூலம் ஈடுஇணையற்ற படைப்பாற்றல், அசாத்தியமான திறனுக்கு எடுத்துக்கட்டாக மாறியுள்ளது அகமதாபாத் மலா்க் கண்காட்சி. பிரதமா் மோடியின் உத்வேகத்தின்கீழ் நடைபெறும் இக்கண்காட்சி, உலக பாரம்பரிய நகரான அகமதாபாதுக்கு சா்வதேச அளவில் தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது. இது வெறும் மலா்களின் கண்காட்சி மட்டுமல்ல; நாட்டின் கலாசார பாரம்பரியம், தேச ஒற்றுமை, படைபாற்றல் திறனின் மாபெரும் கொண்டாட்டம்’ என்று தெரிவித்துள்ளாா்.