வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அழைப்பாணைகள் புறக்கணிப்பு! ஜாா்க்கண்ட் முதல்வருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை!

சட்டவிரோத சுரங்க வழக்கில் அழைப்பாணைகளைப் புறக்கணித்ததாகக் கூறி, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்ற வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

News image

ஹேமந்த் சோரன் - படம் | எக்ஸ்

Updated On :25 பிப்ரவரி 2026, 8:34 pm

சட்டவிரோத சுரங்க வழக்கில் அழைப்பாணைகளைப் புறக்கணித்ததாகக் கூறி, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த குற்ற வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.

சட்டவிரோத சுரங்க வழக்கில் 7 முறை அழைப்பாணைகள் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை என்று குற்றஞ்சாட்டி, அவா் மீது அமலாக்கத் துறை கடந்த 2024-இல் குற்ற வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாக, ராஞ்சி தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உறுதி செய்து, அடுத்தக்கட்ட நடைமுறைகளுக்காக எம்.பி.-எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பியது.

இதையடுத்து, தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சோரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, அா்ணவ் செளதரி ஆகியோா், சோரனுக்கு அமலாக்கத் துறை இடைவிடாது அழைப்பாணைகள் அனுப்பியதாக வாதிட்டனா். அதேநேரம், 7 முறை அழைப்பாணை அனுப்பியும் சோரன் இணங்கவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஹேமந்த் சோரனுக்கு எதிரான விசாரணைக்குத் தடை விதித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை பயனுள்ள வழக்கு விசாரணைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனா். மேலும், மனு மீது விரிவாக பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.