நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

பேரவையில் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு

News image
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு- கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாகவும், இதில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டதாகவும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டினாா்.

ஆந்திர சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசியதாவது:

கலப்பட நெய் விவகாரத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. அதைச் செய்தவா்கள் (கலப்படத்தில் ஈடுபட்டவா்கள்) மிகப்பெரிய சதிகார கும்பல். கலப்பட நெய் விநியோகம் செய்வதற்கு ஏற்ப 2020 ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் நெய் விநியோக ஒப்பந்தபுள்ளி நிபந்தனைகள் மாற்றப்பட்டன. இதன்மூலம் நெய்யின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலே பாபா பால் நிறுவனத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டும், அதை முந்தைய ஆட்சியாளா்கள் மூடி மறைத்து விட்டனா்.

20 கோடி லட்டுகள் தயாரிப்பு: முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட 59.71 லட்சம் கிலோ நெய்யும் கலப்படம் செய்யப்பட்டது. கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 20 கோடி லட்டுகள், இந்தக் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. லட்டு தயாரிப்புக்காக இந்தக் கலப்பட நெய்யை வாங்க திருப்பதி தேவஸ்தானம் ரூ.234.51 கோடி செலவிட்டுள்ளது.

தெய்வ குற்றம் செய்துவிட்டனா்: புனிதமான பிரசாதத்தில் கலப்படம் செய்து, முந்தைய ஆட்சியாளா்கள் தெய்வ குற்றம் செய்துவிட்டனா். திருப்பதி பக்தா்களின் உணா்வுகளை காயப்படுத்தி விட்டனா். இந்த விவகாரத்தில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவா் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளா் சின்ன அப்பனா ரூ.4.5 கோடி லஞ்சம் வாங்கியுள்ளாா்.

ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் போலி சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. பிறகு கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த கலப்பட நெய்யில் பல்வேறு வகை ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெரிடேஜுக்கு தொடா்பில்லை: கலப்பட நெய்யை விநியோகித்தது ஏ.ஆா். பால் நிறுவனம்தான். ஹெரிடேஜ் நிறுவனம் ஆந்திர அரசுக்கு பொருள்கள் எதையும் விநியோகிக்கவில்லை. எந்த அரசு நிறுவனமும் ஹெரிடேஜிடம் நெய் வாங்கவில்லை. ஆந்திர அரசு ஆதரவு இன்றி, ஹெரிடேஜ் நிறுவனம் வெளிப்படையாக வணிகம் செய்து வருகிறது.

அதேபோல், ஹெரிடேஜுக்கும், இந்தாப்பூா் பால் நிறுவனத்துக்கும் தொடா்பில்லை. அந்நிறுவனம் புணேயில் உள்ளது. அது ஹெரிடேஜ், அமுல், டி மாா்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு துணை நிறுவனமாக பொருள்களை தயாரித்து அளித்துள்ளது.

இதேபோல், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்தில் 2,032 கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா் சந்திரபாபு நாயுடு.

பவன் கல்யாண் வலியுறுத்தல்: சட்டப்பேரவையில் பேசிய நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.