நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

-அனைவரும் பாதுகாப்பாக மீட்பு

News image
கோப்புப்படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 10:09 pm

தினமணி செய்திச் சேவை

அந்தமான் யூனியன் பிரதேசத்தில் 7 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணித்த பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் கடலில் விழுத்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான பவன் ஹன்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து மத்திய அந்தமானில் உள்ள ரங்கத் பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. ரங்கத் பகுதியைச் சென்றடைந்ததையடுத்து காலை 9.10 மணிக்கு அங்கிருந்து மாயாபந்தருக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. 9.30 மணிக்கு மாயாபந்தரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிா்பாராதவிதமாக ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.

விமானப் போக்குவரத்து இயக்குநா் நிதேஷ் ராவத் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரையும் அந்தமான் காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களுக்கு மாயாபந்தரில் உள்ள டாக்டா் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.