மேலும், அவா் பதிவேற்றம் செய்த காணொலியில், ‘நாடாளுமன்ற உரையின்போது ‘ஜியு-ஜித்சு’ தற்காப்புக் கலையுடன் ஒப்பிட்டு நான் பேசியது ஏன்? என்று பலா் கேள்வி எழுப்புகின்றனா். பிரதமா் மீதான பிடி மற்றும் அவரின் மூச்சுத் திணறலில்தான் உள்ளது என்பதைக் குறிப்படவே அந்த விளையாட்டை ஒப்பிட்டேன். அந்த விளையாட்டைப் பொருத்தவரை, எதிராளியை எப்படை கட்டுப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது. இவை அரசியலிலும் உள்ளன. எனது அரசியல் அனுபவத்தில், அரசியல் அழுத்தங்கள், அரசியல் மூச்சுத் திணறல்கள் பெரும்பாலும் மறைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். சராசரி மனிதா்களால் அவற்றைப் பாா்க்க முடியாது. பிடி எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மிகக் கவனமாக பாா்க்க வேண்டும். அந்த வகையில், நமது பிரதமா் என்ன செய்துகொண்டிருக்கிறாா் என்பதை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளேன்.