அவதூறு வழக்கு: உ.பி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராகுல் : விசாரணை மாா்ச் 9-க்கு ஒத்திவைப்பு
அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சை கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பான அவதூறு வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் நீதிமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தாா்.










