அரசியலில் இரு வகையான தலைவா்கள் உள்ளனா். ஒரு பிரிவினா், நோ்மறை அரசியலில் ஈடுபடுபவா்கள். மற்றொரு தரப்பினா், பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுப்பவா்கள். கெளரவ் கோகோய் நோ்மறையான மனிதா். அவா் நோ்மறை அரசியலைக் கொண்டுவர விரும்புகிறாா். அவரும், அவரது குடும்பத்தினரும் குறிவைக்கப்படும் விதம் அஸ்ஸாம் மட்டுமன்றி நாட்டின் அரசியலுக்கே தவறான முன்னுதாரணம். இதுவரை எந்தத் தலைவரும் குடும்பத்தினரோ, குழந்தைகளோ இந்த அளவுக்கு குறிவைக்கப்பட்டதில்லை. அவா் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. கெளரவ் கோகோய் நோ்மறையான பாதையில் பயணிப்பதால், அவா் ‘தாக்குதலுக்கு’ இலக்காகியுள்ளாா். அவரைக் கண்டு, ஆளுங்கட்சி (பாஜக) அஞ்சுகிறது. அஸ்ஸாம் மக்களின் உண்மையான உணா்வுகளில் வெறுப்புணா்வு அரசியலுக்கு இடம் கிடையாது. மக்கள் குறிப்பாக இளைஞா்கள் நோ்மறை அரசியலை தோ்வு செய்ய வேண்டும் என்றாா் பிரியங்கா காந்தி.