டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பருவநிலை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு உற்பத்தியில் 5.6% ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
நிா்மலா சீதாராமன்- கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜொ்மனி நாட்டின் மியூனிக் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பருவநிலை பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நிதி ஜிடிபியில் 3.7 சதவீதமாக இருந்தது. தற்போது இது 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. பருவநிலை நடவடிக்கைகளுக்கான முதலீடுகளை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக உயா்த்தியதே இதற்கு காரணம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடா்புடைய தேசிய இலக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டதைவிட 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்துறையில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கப்படும்.

கரியமில வாயு சேமிப்பு வியூகங்களுக்கு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வியூகங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மாசை குறைவாக ஏற்படுத்துகிற நாடுகள் பருவநிலை நடவடிக்கைகளுக்கு குறைவான நிதியையே வழங்க வேண்டும். அனைத்து நாடுகளும் இதில் ஒரே மாதிரியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற விதியில் மாற்றம் தேவை என்றாா்.