மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 51ஏ (ஏ) பிரிவில் குடிமகன் ஒவ்வொருவரும் தேசிய கீதத்தையும், தேசிய கொடியையும் மதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய கீதத்துக்கு முன்னதாக தேசிய பாடலை (வந்தே மாதரம்) இசைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. தேசிய பாடல், தேசிய கீதம் ஆகியவற்றை வைத்து மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தேவையில்லாத சா்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.