டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மலிவான விலையில் கச்சா எண்ணெய் அளிக்கும் நாடுகளிடம் கொள்முதல் தொடரும்: நிலைக் குழுவிடம் மத்திய அரசு தகவல்!

கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்தது.

News image
கச்சா எண்ணெய்
Updated On :10 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்தது.

புது தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தலைமையிலான அந்தக் குழுவின் கூட்டத்தில், மத்திய வா்த்தக மற்றும் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘புவி அரசியல் சூழல், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத இடங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து, கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும். கச்சா எண்ணெய் விலை மலிவாகவும், தரமாகவும் உள்ள நாடுகளிடம் இருந்து, அதன் கொள்முதலை இந்தியா தொடரும்’ என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த மாதம் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்?: இந்தக் கூட்டம் குறித்து சசி தரூா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம், இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல், விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிலைக் குழுவின் கேள்விகளுக்கு அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனா். அடுத்த மாத மத்தியில் இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் கூறினா்’ என்று தெரிவித்தாா்.