டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மக்களவை நடவடிக்கைகளில் ஓம் பிர்லா பங்கேற்க மாட்டார்?

நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் முடியும்வரையில், மக்களவை நடவடிக்கைகளில் ஓம் பிர்லா பங்கேற்க மாட்டார் எனத் தகவல்

News image
மக்களவை தலைவர் ஓம் பிர்லா- கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் முடியும்வரையில், அவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவைச் செயலரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கியுள்ளனர்.இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் தீர்க்கப்படும் வரையில், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது மாட்டார் என்று ஓம் பிர்லா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியிடம் போதுமான எம்.பி.க்கள் இல்லை.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அவையில் உள்ள எம்.பி.க்களின் 50%-க்கு அதிகமான ஆதரவு தேவை.

ஆனால், எதிர்க்கட்சியினருக்கு போதுமான எம்.பி.க்கள் பலம் இல்லாததால் அவைத் தலைவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.