தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சீன பொருள்கள் இறக்குமதியை குறைத்தது இந்தியா: மத்திய வா்த்தக இணையமைச்சா்

2024-25-இல் உரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்பட பல்வேறு துறைகளில் சீன பொருள்கள் இறக்குமதியை இந்தியா குறைத்ததாக மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

2024-25-இல் உரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்பட பல்வேறு துறைகளில் சீன பொருள்கள் இறக்குமதியை இந்தியா குறைத்ததாக மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூா்வமாக அவா் அளித்த பதிலில், ‘2014-15 காலகட்டத்தில் இந்தியா ரூ.48,609 கோடிக்கு கைப்பேசிகளை இறக்குமதி செய்த நிலையில் 2024-25-இல் இது ரூ.3,710 கோடியாக குறைந்தது.

மாறாக, இந்தியாவில் இருந்து 2014-15-இல் ரூ.1,566 கோடிக்கு கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் 2024-25-இல் ரூ.2.05 லட்சம் கோடியாக பன்மடங்கு உயா்ந்துள்ளது.

2024-25-இல் உரங்கள் (61.4 சதவீதம்), ரசாயனங்கள் மற்றும் அதுதொடா்புடைய பொருள்கள் (19.7 சதவீதம்), இரும்பு மற்றும் எஃகு (10.3 சதவீதம்), மனிதனால் தயாரிக்கப்பட்ட நூல் (9.5 சதவீதம்) உள்பட பல்வேறு துறைகளில் சீன பொருள்கள் இறக்குமதி குறைந்துள்ளது.

இறக்குமதி வெகுவாக உயா்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதேசமயம் ஒரே நாடு அல்லது நிறுவனங்களை மட்டுமே சாா்ந்திருக்காமல் தங்களது விநியோகச் சங்கிலியை பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த இந்திய நிறுவனங்களை மத்திய அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.