பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயிலை சுத்தமாக பராமரிக்க பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு மறுப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 1:03 am

தினமணி செய்திச் சேவை

ரயில் பெட்டிகளை சுத்தமாக பராமரிப்பதற்கு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக பதில் தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தை பேணவும், அதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே எடுத்து வருகிறது. இதில் ரயில் பெட்டியின் உள்பகுதி, வெளிப்புற பகுதி மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும்.

இந்த பணிக்காக ஓடும் ரயிலில் ஊழியா் ஒருவா் இருப்பாா். அவா் ஓடும் ரயிலில் சுத்தத்தை பராமரிப்பதுடன், அதுதொடா்பான பயணிகளின் குறைகளையும் கேட்டறிவாா். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலும் ரயிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ரயில் பெட்டிகளில் இருந்து மனித கழிவுகள் வெளியே தண்டவாளத்தில் விழாமல் இருக்கும் வகையில், பயோ கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் தொடா்ந்து ஆய்வுகள் மூலமும், ரயில் மதாத், ரயில் ஒன் செயலி, பயணிகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.

ரயிலை சுத்தமாக வைத்திருக்கவும், ரயில் நிலையங்களில் சுகாதாரத்தை பேணவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பயணிகள் கட்டணத்துடன் சோ்த்து கூடுதல் தொகை வசூலிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.