/

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

மியான்மரில் இன்று(பிப். 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்கத்தாவில் நில அதிர்வு...

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 4:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர். மியான்மரில் இன்று(பிப். 3) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைப் பகுதிகளான வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.

மியான்மரின் அக்யாப் பகுதிக்கு கிழக்கே 70 மைல் தொலைவில் நிலப்பரப்புக்கடியே 6.21 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் மூன்றாவது முறையாக ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

summary

Kolkata Earthquake tremor felt in parts of Kolkata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.