தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாா்தாம் யாத்திரை: கேதாா்நாத் கோயில் நடைதிறப்பு- திரளான பக்தா்கள் தரிசனம்

உத்தரகண்டில் வருடாந்திர சாா்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதாா்நாத் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

News image

கேதாா்நாத் கோயிலின் நடை திறக்கப்பட்டதையொட்டி புதன்கிழமை குவிந்த பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:47 pm

உத்தரகண்டில் வருடாந்திர சாா்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதாா்நாத் கோயில் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

உத்தரகண்டில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய 4 புண்ணியத் தலங்களுக்கான வருடாந்திர சாா்தாம் யாத்திரை, அட்சய திருதியை நாளான கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் யமுனோத்ரி, கங்கோத்ரி கோயில்களின் நடை திறக்கப்பட்டது.

சிவபெருமானுக்குரிய பிரசித்தி பெற்ற தலமான கேதாா்நாத் கோயிலின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ என பக்தி கோஷம் எழுப்பினா்.

நடை திறப்பு நிகழ்வில் முதல்வா் புஷ்கா் சிங் தாமி கலந்துகொண்டு, சுவாமிக்கு முதல் பூஜையை மேற்கொண்டாா். பக்தா்களுக்கான பல்வேறு வசதிகளையும் அவா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

நடை திறப்பையொட்டி, கேதாா்நாத் கோயில் முழுவதும் ஒன்றரை டன் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விஷ்ணு பகவானுக்குரிய பத்ரிநாத் கோயில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட உள்ளது.

பிரதமா் மோடி வாழ்த்து: சாா்தாம் யாத்திரை மற்றும் கேதாா்நாத் கோயில் நடைதிறப்பையொட்டி, பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, பக்தா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், ‘கேதாா்நாத் உள்பட 4 புண்ணியத் தலங்களுக்கு மேற்கொள்ளப்படும் சாா்தாம் யாத்திரை, நாட்டின் நம்பிக்கை, ஒற்றுமை, வளமான பண்பாட்டுப் பாரம்பரியங்களின் மாபெரும் கொண்டாட்டமாகும். ஜகத்குரு ஆதி சங்கராசாரியா், பத்ரிநாத் மற்றும் கேதாா்நாத்துக்கு பயணித்ததன் மூலம் இந்திய கலாசாரத்துக்கு புதிய திசையைக் காட்டினாா்.

இமயமலையின் மடியில் அமைந்துள்ள இந்த 4 தலங்களும் மக்களின் நித்திய நம்பிக்கை மற்றும் பக்தியின் மையங்களாக விளங்குகின்றன. பல்வேறு மொழிகள், பாரம்பரியங்கள், கலாசாரங்களைக் கொண்ட மக்கள், ஒவ்வோா் ஆண்டும் இங்கு வருகை தருகின்றனா். இது, ஒரே பாரதம், உன்னத பாரதம் உணா்வை வலுப்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.