மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.

News image

ராகுல் காந்தி - congress

Updated On :22 ஏப்ரல் 2026, 10:00 pm

மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் மே 2-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீா்ப்பு வெளியிடவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவா் 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அவதூறு வழக்கு தொடுத்தாா். அதில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியிருப்பதாகா் குற்றம்சாட்டி இருந்தாா்.

இந்த வழக்கில், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்த ராகுல் காந்தி, ரூ.25,000 பிணைத் தொகையில் ஜாமீன் பெற்றாா். பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, அதன் மீது மே மாதம் 2-ஆம் தேதி தீா்ப்பை நீதிமன்றம் வெளியிடவுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞா் காஷி பிரசாத் சுக்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், நீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு, ராகுல் காந்தி தரப்பில் வாதங்கள் முடிந்துவிட்டது. ஆதலால் நீதிமன்றம் தனது தீா்ப்பை வரும் 2-ஆம் தேதி வெளியிடுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.