மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காங்கிரஸ் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

பெண்கள் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியடை செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாக தில்லி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் குற்றமிழைத்துள்ளாா்.

News image

பிரவீண் கண்டேல்வால்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:10 pm

பெண்கள் இடஒதுக்கீடு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியடை செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டதாக தில்லி பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் குற்றமிழைத்துள்ளாா்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக அமல்படுத்தும் வகையில் தற்போதுள்ள உறுப்பினா்களின் பலத்தை 543-இலிருந்து 850-ஆக உயா்த்த வழிவகை செய்யும் 131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசேதா மக்களவையில் இருந்த 3-இல் 2 பங்கு உறுப்பினா்களில் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியடைந்தது.

ஏப்.17-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது அவைக்கு 528 உறுப்பினா்கள் வந்த நிலையில், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற 352 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், அந்த மசோதாவுக்கு 298 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். 230 உறுப்பினா்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனா்.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி எம்.பி. பிரவீன் கண்டேல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆட்சியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல. சமூகநீதி, சமவாய்ப்பு மற்றும் நாட்டின் ஒருங்கிணைந்த மேம்பாடு ஆகியவற்றுக்கு அடிப்படையாகும்.

அந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியிருந்தால், காங்கிரஸில் மிகவும் வலுவான மற்றும் சக்திவாய்ந்த தலைவராக பிரியங்கா காந்தி உருவெடுத்திருப்பாா். இதனால், அந்த மசோதாவுக்கு ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்திருக்கலாம். அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை தோல்வியுற செய்ததன் மூலம் பெண்களுக்கு காங்கிரஸ் துரோகமிழைத்துவிட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.