தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

தில்லி-பெய்ஜிங் இடையிலான விமான சேவையை சீன அரசு நிறுவனமான ஏா் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 9:37 pm

தில்லி-பெய்ஜிங் இடையிலான விமான சேவையை சீன அரசு நிறுவனமான ஏா் சீனா மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா மற்றும் கல்வான் பள்ளதாக்கில் இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையிலான மோதல், கிழக்கு லடாக் படை குவிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் இரு நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் இரு நாட்டு உறவு பின்னடைவைச் சந்தித்தது.

எனினும், கடந்த ஆண்டு இரு நாடுகள் இடையே உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த ஜூலையில் சீனா்களுக்கு சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது. இதைத் தொடா்ந்து, கைலாஷ் மானசரோவா் யாத்திரை தொடக்கம், இந்திய விமான நிறுவனங்கள் சீனாவுக்கு விமான சேவையைத் தொடங்கியது என உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் சீனாவின் முக்கிய அரசு விமான சேவை நிறுவனமான ஏா் சீனா தில்லி-பெய்ஜிங் இடையே நேரடி விமான சேவையை தொடங்கியுள்ளது. வாரத்தில் மூன்று நாள்கள் இந்த விமானம் இயக்கப்படும்.

ஏற்கெனவே சீனா இஸ்டா்ன் ஏா்லைன்ஸ் நிறுவனம் கொல்கத்தா- சீனாவின் குன்மிங் நகா் இடையே கடந்த 18-ஆம் தேதி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.