தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நாடுகளின் மோதல்: பிரிட்டன் அமைச்சா்களுடன் இந்திய முப்படை தலைமைத் தளபதி ஆலோசனை

நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் ஆலோசனை

News image

முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:26 pm

நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரிட்டன் பாதுகாப்பு தயாா்நிலை துறை இணையமைச்சா் லூக் பொல்லாா்ட், இந்திய-பசிபிக் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சீமா மல்ஹோத்ரா ஆகியோருடன் லண்டனில் அனில் செளஹான் ஆலோசனை நடத்தினாா்.

இந்தியா-பிரிட்டன் கூட்டுறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. இருநாட்டு பாதுகாப்பு தொழில் செயல்திட்டம், தொழில்நுட்பம், பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.